களவும் அழகு !

அவளின்,

கூந்தல் அழகை இரவு திருடிக் கொண்டது !
நெற்றிப் பொட்டை விண்மீன் திருடிக் கொண்டது !
கருவிழிகளை கயலும் திருடிக் கொண்டது !
உதட்டுச் சிவப்பை பூவும் திருடிக் கொண்டது !

கண்ணீர் துளியை மழை திருடிக் கொண்டது !
சுவாசத்தின் வீச்சை காற்று திருடிக் கொண்டது !
முகத்தின் ஒளியை நிலா திருடிக் கொண்டது !
கழுத்தின் வளவை சங்கு திருடிக் கொண்டது !

எச்சிலின் சுவையை அமிழ்தம் திருடிக் கொண்டது !
அங்கத்தின் நிறத்தை தங்கம் திருடிக் கொண்டது !
கால் கொலுசின் அழகை கவிதை திருடிக் கொண்டது !
கை வலையின் துணிவை வரலாறு திருடிக் கொண்டது !

விரலின் நகத்தை முத்து திருடிக் கொண்டது !
அன்பின் உயர்வை கல்லும்(கடவுளும்) திருடிக் கொண்டது !
குணத்தின் பணிவை புல்லும் திருடிக் கொண்டது !
மனத்தின் தூய்மையை பணியும் திருடிக் கொண்டது !

பண்பாட்டின் கூற்றை பாரதம் திருடிக் கொண்டது !
கேட்கும் ஒலிகளை மெல்லிசை திருடிக் கொண்டது !
பேச்சின் இனிமையை தமிழ் திருடிக் கொண்டது !

அவளோ,
தன் நினைவால், என்னையே திரிடிக் கொண்டு போய் விட்டால்,
இதனால் தான் களவும் அழகோ !

Comments

king Sat said…
நல்ல முயற்சி

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter