Posts

Showing posts with the label நான்முகன்

சிவபுராணம்

ஆதியிலான் அந்தமிலான், ஊனுருவம் மேதுமிலான். நான்முகனும் மாலவனும், மூவுலகும் விழைந்தறியா, ஓங்கார மந்திரமாய், தழற்பிழம்பாய் நீண்டிருந்தான். ஆடவனா பெண்ணினமா, இரண்டுமில்லா நடுநிலையாம். ஓருயிராம் ஒருணர்வாம், அஃறிணையும் அவனினமாம். அனுவுள்ளும் அவனுளானாம், அவனுள்ளும் அவளுளாளாம். நான்மறையும் நவின்ற, நான்முகனின் நாவர்க்கு, கல்லாலின் புடையமர்ந்து, எல்லாமும் சொன்னவனாம். முத்திரையால் வித்தகர்க்கு, மெய்யுரைத்த தத்துவனாம். கூர்மத்தில் மந்திரமலையேற்றி, அரவத்தால் ஆழியை கடைந்த, தேவரும் அசுரரும் மாலும்கூட, ஆலகாலம் கண்டு திகைக்க, நஞ்சை கண்டத்தில் நிறுத்தி, நீலகண்டனாய் ஆனவனாம். வண்ண தாரகையின் பிடியில், மதிமயங்கி பொலிவிழந்து, வெட்கிக்கிடந்த அம்புலியை, வரங்கொடுத்து மீட்டவனாம். தேய்பிறையும் முழுநிலவும், உலகிற்கு தந்தவனாம். மருமகனுக்கோ அழைப்பில்லை, கோமகனுக்கும் படையலில்லை, தக்கனின் நிந்திக்கும் யாகத்திற்கு, பத்ரனையும் காளியையுமனுப்பி, கண்டித்தவனாம் தண்டித்தவனாம், நிந்தித்தவரைத் துண்டித்தவனாம். உலகம் காக்க ஆயுதம் வேண்டி, அரியும் இவன்பதம் நாடிடவே, ஆயிரமலரில் ஒர் கருமலர...