அட என்னாத்த சொல்வேணுங்கோ !

அன்று வந்ததும் இதே நிலா! ட ட டா !
இன்று வந்ததும் அதே நிலா! ட ட டா !

அன்றைய தமிழ்க் கவிஞனின் கண்ணில் நிலவாய் மாறிப் போன பெண், இன்று படும் அவல நிலை என்ன தெரியுமே ?

நாட்டு சரக்கு நச்சினு தான் இருக்கு,
காணும் இடம் அத்தனையும் கலர் கலர இருக்கு !
தங்க கொடமே, தஞ்சாவூரு கடமே,
மந்திரிச்சி விட்டு புட்ட மலையாள படமே !
என்ன size இது மாமு, ரொம்ப nice கிது !
என்ன வயசு இது மாமு, ஐய ice கிது !

மருமகனின் லீலைகள் போதாதென்று, மாமனாரின் வரிகள் வேறு,

bun bun நீ sweet bun,
butter jam போலே நான் தான்,
உன்தான் மேலே தான் நான்,
ஒட்டி கொள்ள தான் வா !

மிக அற்புதமாக செதுக்கப்பட்ட வரிகள், அதிலும் பாதி ஆங்கிலம்.
அடுத்தவர் எல்லாரையும் விஞ்சியவர். இவர் வர்ணிக்காத உணவு பொருள் ஏதேனும் உண்ட என்று ஆராய்ச்சி நடக்கின்றது.

திம்சு கட்ட, அய் அய் திம்சு கட்ட,
ஏண்டி என்ன கெடுத்து புட்ட !
பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே !
தத்தளதள தத்தளதள தக்காளி பழமே !

காய்கறி மட்டும் அல்ல,
சிக்கன் கறி, சிக்கன் கறி, சிக்கன் கறி,
இது கோத்தகிரி கோழிக் கறி, மட்டன் கறி !

அடுத்தவர் ஒரு சமையல் அறையை உருவாக்கியவர்,
அண்டங் காக்கா கொண்டக்காரி,
அச்சு வெல்ல தொண்டகாரி,
IR 8 பல்லுக்காரி, அயிர மீனு கண்ணுகாரி !

சற்று புளி இருந்தால் சமைத்தே விடலாம்! இப்படி பெண்களை பாடி பாடிப் பழத் தோட்டமாகவும், மளிகை கடையாகவும் மாற்றிய பெருமை பலருக்கு உண்டு .

பால் பாப்பாளி, வெள்ள தக்காளி ! என்றும்

Apple பெண்ணே நீ யாரோ ? Icecream சிலையே நீ யாரோ ? என்று ஆண்கள் பாடிகொண்டிரிக்க, பெண்களின் வரிகள் காதை குளிர வைக்கின்றன !

சாப்பிட வாட, என்ன சாப்பிட வாட! என்று மன்மதனை அழைக்கும் பெண் ஒரு புறம்.

கட்டி புடி, கட்டி புடிடா !
கண்ணாளா, கண்டபடி கட்டி புடிடா ! என்று குஷுயாக கூவும் பெண் மறு புறம்.

சும்மா இருப்பவனே இப்படி என்றால், மன்னர் சும்மா இருப்பாரா ?

கண்ணிலே மீனடி,
நெஞ்சிலே தேனடி !
என்று நக்கியர் போல் அவர் ஒரு புறம்.

தமிழ் பெண் படுகிறாள் பாடு.
காரணம், ஒரு சிறந்த பாடலில் ஒரு வரி,

காலங்களில் அவள் வசந்தம்,
கலைகளிலே அவள் ஓவியம்!
.
.
.
கனிகளிலே அவள் மாங்கனி !

அன்றி செய்த சிறு தவறினால், இன்று கனி முதல் மது வரை பெண் தான் !

பம்பரக் கண்ணு, பச்ச மொளாகா, இஞ்சி மரப்பா, இளக்க வச்சான்!
சக்கர பன்னு, ஜாவ்வு மிட்டாய், ஜிவ்வுனுதான் சினுக்க வச்சான் !

ஈ மொய்க்கும் வரிகள்.

இளந்த பலம், இளந்த பலம் உனக்கு தான்,
செக்க செவந்த பலம், செவந்த பலம் உனக்கு தான்,
பால் பழம் உனக்கு தான், பாயாசமும் உனக்கு தான்,
சக்கர உனக்கு தான், சக்கர பொங்கல் உனக்கு தான் !

சுவையான வரிகள். பெண்களின் நிலைமை இன்று ஒரு பழத்தை போல தான். கனிந்து, பழுத்து, தின்ன விட்டால் அழுகிவிடும். தின்னும் முயற்சியில் கவிஞர்கள்.

இவற்றை எழுதிக்கொண்டிரிக்கும் பொழுது, என் நினைவில் பட்ட ஒரு சரணம் ,

சாராயம், கருவாடு, துண்டு பீடி, வவ்வாலு,
குடிச, குப்ப தொட்டி, பக்கத்துல டி கட!
ரிக்க்ஷா, காத்தடி, பாட்டுளோடு மாஞ்சா,
கில்லி, கோலி, லுங்கி, பானா , கானா பாட்டு பாடலாமா?
ஆல, அஞ்சலா, பஜாரு, நிஜாரு,
கணியப்பா, முனியம்மா, கிரி, கஜா, மன்னி,
MGR, சிவாஜி, ரஜினி, கமலு,
பகிலு, பிகிலு, செவிலு, அவுலு,
All shows house fullu!
தமிழை முன்னேற்ற தமிழன் கண்ட வழிகள்!

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter