Posts

Showing posts with the label அருணகிரிநாதர்

குறிஞ்சித் தலைவன்

பித்தற்கொரு சத்தித் திருமகன் சித்தைதொட தித்தித் தறுமுகன் முத்திப்பெரு வித்தைக் கொருகுரு சரவணமே... முற்றுக்கரு வற்குத் திருமறை மற்றும்வுரு வற்றத் தொருநிலை கற்பித்துமு ணர்த்தித் திருவருள் புரிந்தவனே... அட்டத்திசை சுற்றித் திரிந்தெலி அத்தப்பதம் பற்றிப் புகுந்திட வெற்றிக்கனி யெட்டத் தவறிய கனிமுகனே... சுட்டப்பழம் வைத்துக் கிழவியின் பிற்பட்டத றுத்துக் குணமகள் திக்கெட்டிணை யற்றப் புகழ்பெறச் செய்தவனே... மொட்டைக்கிரி பட்டுச் சரிந்திட நத்துப்பறை கத்திக் கரைந்திட பித்துக்குளி புத்திப் பெறவரங் கொடுத்தவனே... மக்குங்கரி யொத்தப் பதுமனை குத்திக்கொலை யிட்டுக் குலவழி எட்டிப்பகை விட்டுச் செலதுணை யிருந்தவனே... சொற்பர்கறி சொர்க்கத் தமரனின் தத்தைக்கினி யத்திக் கரத்தினை பற்றிப்பல பத்தர்த் தொழதிட குன்றுமொன்றே... முட்கற்றொடு தித்துக் கழனியில் நித்தம்மமு திட்டுக் கடம்பனின் சித்தம்நிறைந் திட்டக் கனிக்கொரு திருத்தணியே... நத்தைப்பல றுத்தப் புலவரும் நித்தப்பதம் பற்றித் தமிழனில் பத்துப்பல வைத்துத் துதித்தத் தவப்பயனே. குறிப்பு: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நூலில் இடம்பெற்றுள்ள ...